உடலுறவின் போது மரணமடைந்த இளைஞருக்கு காப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உடலுறவின் போது மரணமடைந்த இளைஞருக்கு காப்பீடு வழங்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

in News / International

பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு அலுவலர் தனது அலுவலகத்தின் பணிக்காக வெளியூர் சென்றார். பணிகளை முடித்துவிட்டு அவர் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார். அப்போது ஒரு பெண்ணுடன் உறவு கொண்டதாக தெரிகிறது. அவ்வாறு உறவு கொண்டு இருக்கும் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்

இதனையடுத்து அவரது குடும்பத்தினர் அலுவலக வேலையாக வெளியூர் சென்றிருக்கும் தனது கணவர் வீடு திரும்பும் வரை அலுவலகம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே அலுவலக வேலையாக சென்றிருக்கும் போது அவர் மரணம் அடைந்ததால் அலுவலகம் தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் இன்சுரன்ஸ் நிறுவனமும் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அலுவலக வேலையாக வெளியூர் சென்ற நபர் எந்த காரணத்திற்காக மரணம் அடைந்திருந்தாலும், அதற்க்கு முழு பொறுப்பு அலுவலகம் தான் ஏற்க வேண்டும் என்று கூறி உரிய நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. அதேபோல் இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top