குமரி மாவட்டத்தில் மேலும் 2 பேர் குண் டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் கடந்த வருடம் அதே பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரை அடித்து கொலை செய்தார். இந்த வழக்கில் கருங்கல் போலீசார் அவரை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்த மகேஷ், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு வரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் மீது மேலும் ஒரு கொலை வழக்கும் உள்ளது. தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடு பட்ட மகேஷை குண்டர் சட்டத்தில் - கைது செய்ய எஸ்பி - ஸ்ரீநாத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று மகேஷை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க - கலெக்டர் பிரசாந்த் வடநேரே உத்தரவிட் டார். இதையடுத்து - கருங்கல் இன்ஸ்பெக் டர் (பொறுப்பு ராஜ் மற்றும், எஸ்.ஐ ஹரி குமாரன் தலைமையிலான போலீசார் நாகர்கோவில் சிறையில் இருந்த மகேஷை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை - சிறையில் அடைத்தனர்.
இதே போல் திருவட்டார் அடுத்த திற்பரப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெகன் (34). இவர் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. போலீஸ் ரவுடி பட்டியலிலும் இவர் இருந்து வந்தார். சமீபத்தில் இவரை அருமனை போலீசார், கொள்ளை வழக்கில் கைது செய்தனர். தொடர்ந்து இவர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால், ஜெகனையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு எஸ்.பி. ஸ்ரீநாத் பரிந் துரை செய்தார்.இதை ஏற்று, ஜெகனையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட் டார். அதன் பேரில் , நாகர்கோவில் சிறையில் இருந்த ஜெகனை குண்டர் சட்டத்தில் கைது செய்து, பாளை சிறையில் அடைத்தனர். இதையடுத்து குமரி மாவட்டத்தில் இந்தவருடத்தில் குண் டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.
0 Comments