மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியில் முழு நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இங்கு மண்ணெண்ணெய் பேரல்களை வெளியே வைப்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று கடைக்கு வெளியே வைத்திருந்த 200 லிட் டர் கொள்ளளவு கொண்ட ஒரு பேரல் மண்ணெண்ணெய் மாயமாகி உள்ளது.
இது குறித்து கடை விற்பனையாளர் சுசீலா அக்கம் பக்கத்தில் விசாரித்தும் எந்தவித தகவலும் இல்லை . இதையடுத்து அவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல செம்மங்காலை நியாய விலைக் கடையில் கடந்த வாரம் ஒரு பேரல் மண்ணெண்ணெய் திருடப்பட்டிருந்தது. மேலும் சமீபத்தில் கொல்லங்கோடு பகுதியிலும் நியாயவிலைக்கடையில் மண்ணெண்ணெய் பேரல்கள் திருடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments