கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 18 ஆடுகள் மற்றும் மாடுகளை திருடியதாக நாகர்கோவிலை சேர்ந்த 3 வாலிபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி தென்தாமரைகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஆடுகள் மற்றும் மாடுகள் திருடு போய் வந்தன. குறிப்பாக மேச்சலில் நின்று கொண்டு இருக்கும் கால் நடைகளை கடத்தி சென்று விடுவது விவசாய்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வந்தது.
இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கன்னியாகுமரி சரக டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் நடத்திய தீவிர விசாரணையில், இந்த ஆடு மாடுகளை நாகர்கோவில் அருகே உள்ள சரலூரை சேர்ந்த முத்துக்குமார்(26), கோகுல் (21), புதூரை சேர்ந்த தங்கதுரை (37) ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஏராளமான ஆடுகளையும் மாடுகளையும் போலீசார் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 Comments