களியக்காவிளை அருகே கடந்த 2 தினங்களுக்கு முன், தண்ட வாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ரயில் மோதி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி இறந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஸ்ரீகுமார் உடல் முழுவதும் சிதைந்த காரணத்தால் இறந்தவர் யார். எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை . அவரது உடல் அருகே ஒரு பைக் சாவி கண்டெடுக்கப்பட்டது. அதை வைத்து விசாரித்தும் துப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து ரயில்வே எஸ்ஐ குமார் ராஜ் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்தநிலையில் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே தனுவச்சபுரம் பகுதியை சேர்ந்த ஸ்ரீகுமார் (42) என்பவர் காணாமல் போன விவரம் தெரியவந்தது. தொடர் விசாரணையில், ரயில் மோதி இறந்து கிடந்தது அவர் தான் என்பது உறுதியானது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் ஒப்படைக்கப் பட்டுள்ளது. ஆனால் இறந்தவரின் பைக் கிடைக்கவில்லை. அவர் எதற்காக இங்கு வந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments