விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் கலை அரசர் போட்டியிடுகிறார். அவர் தொகுதியில் திறந்த வாகனத்தில் சென்றும், வீடு வீடாக பொதுமக்களை சந்தித்தும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று விளாத்துறை, காப்புக்காடு, மாராயபுரம், வெட்டுமணி, குழித்துறை, மார்த்தாண்டம், ஞாறான்விளை, ஆலுவிளை, பேரை, கொடுங்குளம், கீழ்பம்மம், ஆயிரம்தெங்கு போன்ற பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
திற்பரப்பு வலதுகரை சானலை சீரமைத்து கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி வாங்கி தரப்படும். விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பால் உற்பத்தியை அதிகரித்து வெண்மைப் புரட்சி உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதன்மூலம் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன் வருமானம் அதிகரிக்கும். தொகுதி வளர்ச்சிக்காக கிரிக்கெட் மட்டை சின்னத்தில் வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக அவர் கீழ்குளம் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் எம்.பி. டென்னிஸ் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
0 Comments