விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
சீமானின் பேச்சு குறித்து காங்கிரஸ் கட்சி அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையை தூண்டும் வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 பிரிவுகளின் கீழ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி போலீஸ் தாமாக முன்வந்து இந்த வழக்கை பதிவு செய்து உள்ளனர். இதனால் காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
0 Comments