மண்டைக்காடு அருகே சிசிடிவி கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட தகராறையடுத்து பேராசிரியை உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மண்டைக்காடு அருகே படர்நிலம் கல்லத்திவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (57). வனத்துறையில் அலுவலராக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி பேராசிரியையான அபிஷா(22) என்பவருக்கும் இடையே பாதை பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் அபிஷாவின் கணவர் செல்வகுமார், பொன்னுசாமியின் வீட்டில் உள்ள 2 சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட பொன்னுசாமியை செல்வகுமார், அவரது மனைவி அபிஷா, உறவினர் சகிலா ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தை பேசி, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பொன்னுசாமி மண்டைகாடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் செல்வகுமார், அபிஷா, சகிலா ஆகியோர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இதே போல் அபிஷா மண்டைக்காடு போலீசில் புகார் மனு அளித்தார்.
அதில், கல்லூரி செல்வதற்காக கணவருடன் பைக்கில் செல்லும்போது பொன்னுசாமியின் மகன் அஜித்குமார் தடுத்த நிறுத்தி தகராறு செய்ததாக கூறியுள்ளார். புகாரின்படி போலீசார் அஜித்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments