வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி பங்கு போட்டு தின்ற 5 பேர் மீது வழக்கு பதிவு.! ஒருவர் கைது

வெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி பங்கு போட்டு தின்ற 5 பேர் மீது வழக்கு பதிவு.! ஒருவர் கைது

in News / Local

இறச்சகுளம் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றியை வேட்டையாடி பங்கு போட்டு கொண்டிருந்த 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் இறச்சகுளம் அடுத்துள்ள தென்றல் நகர் பகுதியில் சுமன் வயது 27 சுமன் என்பவர் கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று இரவு அந்த வெடி பொருள் கலந்து உணவு வைத்துள்ளார்.

அப்போது கோழி பண்ணைக்குள் வந்த காட்டு பன்றி அந்த வெடி குண்டு உணவை உட்கொண்ட போது வெடித்து காட்டு பன்றியின் வாய் மற்றும் முகம் சிதைந்து அந்த இடத்தில் இறந்து விட்டது.இதனையடுத்து சுமன் மற்றும் அவரது நண்பர்களான இறச்சகுளம் பகுதியை சேர்ந்த சிவா, ராஜவேல், அஜய் ,ராஜா ஆகிய 5 பேரும் சேர்ந்து காட்டு பன்றியை வெட்டி பங்கு போட்டு கொண்டிருந்தனர்.

தகவலறிந்த வனச்சரகர் மணி மாறன் தலைமையில் வன துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது வனத்துறையினரை கண்ட குட்ட சிவா ராஜவேல் அஜய் ராஜா ஆகிய 4 பேரும் தப்பி ஓடினர். சுமன் மட்டும் பிடிபட்டார். அவரை கைது செய்து மற்ற நான்கு பேரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top