களியக்காவிளை அருகே உள்ள எஸ்.டி.மங்காடு காட்டுவிளையை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி ராஜ குமாரி (55). இவர் நேற்று முன்தின ம்படந்தாலுமூடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து விட்டு மாங்காடு செல்ல அரசு பஸ்சில் ஏறினார். களியக்காவிளை பகுதியில் பஸ் சென்ற போது, அவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் செயின் மாயமாகியிருந்ததை கண்டு அதிர்ச்சியில் கூக்குரலிட்டார். உடனே பஸ்சில் இருந்த சக பயணிகளிடம் தேடியும் நகை கிடைக்கவில்லை . இதுகுறித்து ராஜகுமாரி களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் செய்தார்.
இதுபோல் வாவறை பகுதியை சேர்ந்தவர் ஷாலினி (30), இவர் களியக்காவிளை வருவதற்காக தனது ஒன்றரை வயது குழந்தையுடன் அரசு பஸ்சில் ஏறினார். அப்போது குழந்தையின் கையில் அணிந்திருந்த 2 கிராம் வளையல் மாயமாகியது. இதுகுறிக்கு ஷாலினி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
0 Comments