குமரிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய புயல் சின்னத்தை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்வளத்துறை கூடுதல் இயக்குநர் தலைமையில் 35 துறை அலுவலர்களை கொண்ட 10 குழுக்குள் அமைக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 குழுக்களும் முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் என்றும், கடலில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பாத படகுகளின் இருப்பிடத்தை கண்டறியும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
0 Comments