நாகர்கோவில் காசியின் வழக்கில் அதன் தீவிரம் புரியாமல் சிபிசிஐடி செயல்பட்டு வருவதுபோல் தெரிகிறது- உயர்நீதிமன்ற மதுரை கிளை
பெண்களை பாலியல் ரீதியாக மிரட்டி மோசடி செய்த நாகர்கோவில் காசியின் வழக்கில் அதன் தீவிரம் புரியாமல் சிபிசிஐடி போலீசார் செயல்பட்டு வருவதுபோல் தெரிவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் கைதான காசியின் நண்பன் தினேஷ், ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்திருந்தான். விசாரணையின்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வருகிறது என்றார்.வழக்கு பதிவு செய்து 90 நாட்கள் கடந்துள்ள சூழ்நிலையில் விசாரணை குறித்து சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் ஏன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, தினேஷுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.வழக்கில் காலதாமதம் செய்து வந்தால், அனைத்து குற்றவாளிகளும் ஜாமீன் பெற்று தப்பித்து விடுவார்கள் என்று கூறிய நீதிபதி, சிபிசிஐடி டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க நீதிபதிஉத்தரவிட்டார்…
0 Comments