கடலில் மீன் பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் கண்டுபிடிப்பு.!

கடலில் மீன் பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் கண்டுபிடிப்பு.!

in News / Local

கடலில் மீன் பிடிக்க சென்ற குமரி மீனவர்கள் கண்டுபிடிப்பு.!

குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து கடந்த 9 ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது எதிர்பாராத விதமாக நடு கடலில் கப்பல் மோதி வள்ளவிளை மீனவர்கள் சென்ற படகு விபத்து ஏற்பட்டு காணாமல் போனது.இதனையடுத்து காணாமல் போன மீனவர்களை கண்டுப்பிடித்து தர வேண்டி மீனவர்களின் உறவினர்கள் ,அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

தற்போது விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட படகில் பயணம் செய்த குமரிமாவட்டம் வள்ளவிளையை சேர்ந்த 11 மீனவர்கள் பத்திரமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது.அவர்களை மீட்டு வர கர்நாடக கப்பல் படையினர் சென்றுள்ளதாக கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top