மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய கோரியும் விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனத்தில் கொடுத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் ஆகையால் மத்திய பாஜக அரசையும் அரசுக்கு துணை போகும் ஆளும் கட்சி அதிமுக அரசை கண்டித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்த கருப்புக்கொடி போராட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயளாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் கன்னியாகுமாரி சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், மாநகர செயளாளர் மகேஷ் ,மாவட்ட பொருளாளர் கேட்சன் ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன்,பொறியாளர் அணி அமைப்பாளர் உன்.எஸ்.பார்த்தசாரதி ,தலைமை செயற்குழு உறுப்பினர் சி.சாய்ராம், மாநில கலை இலக்கிய பேரவை செயளாளர் தில்லைசெல்வம் ஒன்றிய செயளாளர்கள் தாமரை பாரதி, லிவின்ஸ்டன், சர்குருகண்ணன்,மதியழகன், குட்டிராஜன், நெடுஞ்செழியன் , ரமேஷ்பாபு அணி நிர்வாகிகள் சிவராஜ், சதா, உதயகுமார், சதீஷ், ராஜன் மாணவரணி சந்திரசேகர் ஆனந்த், சாகுல், காரவிளை செல்வம் சுரேந்திரகுமார் ஆனந்த் ,சங்கர் ,ரஞ்சித், முருகபெருமாள் பகவத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments