வள்ளத்தில் தவறி விழுந்து மீனவர் மாயம்!

வள்ளத்தில் தவறி விழுந்து மீனவர் மாயம்!

in News / Local

மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் பனிப்பிள்ளை . இவரது மகன் ஆரோக்கிய பிரபு (36). மருமகள் தீபா (28). தீபா நிறைமாத கர்ப் பிணி ஆவார். தற்போது தீபா பிரசவத்திற்காக திங்கள் நகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரோக்கியபிரபு வழக்கம் போல் கெவின் என்பவரின் வள்ளத்தில் நேற்று காலை மீன் பிடிக்க சென்றார். அவருடன் சகாய ஸ்டாலின் (35), சுரேஷ் (40), ஜார்ஜ் (38) ஆகியோரும் சென்றனர். சுமார் 17 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென கடலில் மழையுடன் இடி - மின்னல் ஏற்பட்டது.

இதனால் கடலில் சீற்றம் ஏற்பட்டு வள்ளம் அலையில் தள்ளாடியது. இதில் எதிர்ப்பாராமல் ஆரோக்கிய பிரபு தவறி கடலில் விழுந்தார். உடன் சென்ற மீனவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால். துரதிருஷ்டவசமாக அதற்குள் அவர் நீரில் மூழ்கினார். இது குறித்து அவரது தந்தை பனிப்பிள்ளை குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். சப் - இன்ஸ்பெக்டர் ஜாண்கிங் சிலிவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மனைவி பிரசவத்திற் காக மருத்துவமனையில் அனுமதித்த வேளையில் கணவர் ஆரோக்கிய பிரபு கடலில் மாயமான சம்பவம் புதூர் மீனவ கிராமத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top