சுற்றுலா நகரமான புதுச்சேரியில் அண்மை காலமாக விபச்சாரம், கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு மிகவும் சீரழிந்து வருவதாக புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் ஐடி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விபச்சாரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி என பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில், கிருமாம்பாக்கம் காவல்நிலைய போலீசார், அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த தனுசு, செல்வம், மணிகண்டன், சாந்தகுமார் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களை காப்பகத்தில் தங்க வைத்தனர்.
பின்னர் இளம் பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், அழகு நிலைய வேலைக்காக என்று கூறி அவர்களை அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது. இதனையடுத்து விசா போன்ற எந்தவித ஆவணங்களும் இல்லாமல், இந்தியாவுக்குள் நுழைந்து சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்காளதேச இளம்பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்ற அனுமதியுடன் கைது செய்தனர்.
0 Comments