மணவாளக்குறிச்சி கோயில் வளாகத்தை சேர்ந்தவர் முஸ்தபா கமால் (58), இவர் மணவாளக் குறிச்சி சந்திப்பில் ஜவுளிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். கடந்த 9ம் தேதி தனது வீட்டை சுத்தம் செய்வதற்காக தக்கலை சரல் விளையை சேர்ந்த தொழிலாளி நெல்சன் (30) உள்பட சிலரை ஏற்பாடு செய்திருந்தார். மாலை பணி முடிந்து தொழிலாளர்கள் சென்றபின் முஸ்தபா கமால் அவரது அறையில் உள்ள அலமாரியை பார்த்தபோது அலமாரியில் இருந்த 2 பவுனில் செய்யப்பட்ட 2மோதிரங்களை காணவில்லை.
இது குறித்து அவர் மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் சந்தேகத்தின் பேரில், வீட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நெல்சனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், நெல்சன் மோதிரத்தை எடுத்து அவரது நண்பரிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் நெல்சனை கைது செய்தனர்.
0 Comments