புதுக்கடை அருகே ஜல்லி கடத்தி வந்த டாரஸ் லாரி  பறிமுதல் - டிரைவர் தப்பி ஓட்டம்!

புதுக்கடை அருகே ஜல்லி கடத்தி வந்த டாரஸ் லாரி பறிமுதல் - டிரைவர் தப்பி ஓட்டம்!

in News / Local

குமரி மாவட்டம் புதுக்கடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கனிமவள கொள்ளைகளை தடுக்கும் வகையில், குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அன்பு எழில், உதவியாளர் பங்கிராஜ், புதுக்கடை சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நேற்று முன்தினம், புதுக்கடை அருகே உள்ள உடைவிளை அருகே வந்து கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக டாரஸ் லாரி வந்தது. சந்தேகத்தின் பேரில் அந்த லாரியை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை செய்தனர். ஆனால் டாரஸ் லாரி டிரைவர், வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

பின்னர் சிறிது தூரம் சென்றதும் லாரியை நிறுத்தி விட்டு தப்பினார். டாரஸ் லாரியை சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி ஜல்லி கற்கள் கடத்தி தந்தது தெரிய வந்தது. அதையடுத்து அந்த டாரஸ் லா யை கைப்பற்றி, புதுக்கடை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் லாரியில் இருந்தவர் சூழால் அருகே கடுவாக்குழி பகுதியை சேர்ந்த விஜில் என்பது தெரிய வந்தது. அவர் மீது, கிராம நிர்வாக அலுவலர் அன்பு எழில் அளித்த புக ரின் பேரில், புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top