மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று குமரிமாவட்டத்தில் சிவாலய ஓட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பன்னிரெண்டு சிவாலயங்களில் சென்று வழிபட்டனர்.
ஆண்டுதோறும் வழிவழியாக நடைபெறும் இந்த நிகழ்வு மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகும். பக்தர்கள் கைகளில் விசிறியுடன் வீசிக்கொண்டே இந்தத் தலங்களுக்கு ஓடியும்,நடந்தும் செல்வார்கள். இதனால் இந்த விழாவை சிவாலய ஓட்டம் என்று அழைக்கிறார்கள்.
0 Comments