மனைவியை தாக்கிய கணவர் கைது!

மனைவியை தாக்கிய கணவர் கைது!

in News / Local

பூதப்பாண்டியை அடுத்துள்ள கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மீனா(48) இவர் அழகியபாண்டியபுரம் தபால் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது கணவர் பசுபதியும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் அழகிய பாண்டியபுரம் போஸ்ட் ஆபீஸ் முன்பு மீனா நின்று கொண்டிருக்கும் போது அங்கே வந்த பசுபதி, மீனாவை தாக்கி தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.இது குறித்து மீனா கொடுத்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் பசுபதி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top