பூதப்பாண்டியை அடுத்துள்ள அருமநல்லூர் பள்ளி அருகே அரசு மதுபானத்தை விற்பனை செய்வதாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ.மாரிச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றவரை பிடித்து விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது அதில் 35 மது பாட்டில் இருப்பது தெரிய வந்தது.
மேலும் அவர் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த மணி என்ற சோபன தாஸ் (45) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து மது பாட்டில்களை பறிமுதல் செய்து சோபன தாஸை கைது செய்தனர்.
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை
தற்போது நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் வீடுகளில் தேக்கு மரங்கள் பூத்து குலுங்கும் காட்சிகளை பல இடங்களில் காண முடிகிறது .
0 Comments