மேட்டுப்பாளையம் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்த தனது பிள்ளைகளின் கண்களை தானம் செய்து அனைவரது நெஞ்சையும் நெகிழ வைத்துள்ள தந்தை.
கோவை மேட்டுப்பாளையத்தில், நேற்று முன் தினம் தடுப்பு சுவர் இடிந்த விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்த, 10ஆம் வகுப்பு படிக்கும் மகன் ரங்கநாதன் மற்றும் கல்லூரி படிக்கும் மகள் நிவேதா இருவரையும் பறிகொடுத்த சூழலிலும், தன் இரு பிள்ளைகளின் 4 கண்களையும் தானம் செய்துள்ளார் டீக்கடை தொழிலாளியான அவர்களது தந்தை செல்வராஜ்.
0 Comments