கள்ளக்காதலி வீட்டிலிருந்து ஆடையில்லாமல் தெருவில் சென்ற இளைஞர் போலீசிடம் சிக்கினார்!

கள்ளக்காதலி வீட்டிலிருந்து ஆடையில்லாமல் தெருவில் சென்ற இளைஞர் போலீசிடம் சிக்கினார்!

in News / Local

சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை, காந்திநகர் பகுதிகளில் நள்ளிரவில் நிர்வானமாக கையில் கத்தியுடன் ஒருவர் சுற்றி திரிவதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அது தொடர்பாக சிசிடிவி ஒன்றும் வெளியாகி கத்தியுடன் சுற்றி திரியும் மர்ம நபர் என வாட்ஸ்ஆப்பில் தகவல் பரவியது.

இந்நிலையில் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்பொழுது காமராஜர் சாலை சந்திப்பில் உள்ள தனது கள்ளகாதலி வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார்.

அப்போது, வெளியில் யாரோ வந்ததால், நிர்வாணமான நிலையிலேயே பின்பக்கமாக ஓடிவிட்டதாக கூறியுள்ளார்.

பின்னர், தனது உடைகளையும், செல்போனையும் எடுக்க மீண்டும் அங்கு சென்றதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். இதை அடுத்து போலீசார் அவருக்கு அறிவுரை கூறியும், எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top