காஞ்சிபுரத்தில் உருவாகும் புது விமான நிலையம்!

காஞ்சிபுரத்தில் உருவாகும் புது விமான நிலையம்!

in News / Local

சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் விமான நிலையம் இயங்கிவருகிறது. இதிலிருந்து உள்ளூர்,உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்கள் அனைத்தும் ஒரே இடத்திலிருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. விமானங்களின் எண்ணிக்கையும் அதிகப்படுகிறது. இதனால் இடநெருக்கடி, நேர நிர்ணயத்தில் அவ்வப்போது குழப்பங்கள் அதிகம் உருவாக்கி வருகிறது..

எனவே சென்னையிலேயே இரண்டாவது விமான நிலையம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. விமான நிலையம் அமைக்க, இடத்தை தேர்வு செய்யும் பணிகள் ஏற்கெனவே விமான நிலைய ஆணையத்தில் பரிசீலணையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் ஆய்வு செய்ததில், காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க சாத்தியக்கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

போர்க்கால அடிப்படையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top