குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :
தமிழ் நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த நாளை முன்னிட்டு 1.11.2019 (வெள்ளி) குமரிமாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர்விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது. அன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ள, உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 23.11.2019 (சனி) அன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
உள்ளூர் விடுமுறையான 1.11.2019 அன்று குமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
0 Comments