கன்னியாகுமரியில் திருடிய பைக்கை விற்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

கன்னியாகுமரியில் திருடிய பைக்கை விற்க முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்

in News / Local

கன்னியாகுமரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் பைக்கை விற்பதற்காக வந்துள்ளார். இளைஞரின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து கன்னியாகுமரி போலீசார் பைக்கை விற்க முயன்ற இளைஞரிடம் நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி பகுதியில் கடந்த சில மாதங்களாக பைக் திருடப்பட்டதில் இளைஞருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதனையடுத்து மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் தூத்துக்குடி திரேஸ்புரம் இரண்டாவது தெருவை சேர்ந்த லியோன் மகன் மரிய ஜெனிஸ்டன் (20), என்பதும், அவருடன் கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பால்பண்ணை தெருவை சேர்ந்த அபி மகன் வினோத் (17) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரிடம் நடத்திய தீவிர விசாரணையில் கன்னியாகுமரி பகுதியில் பைக்கை திருடி தூத்துக்குடியில் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நான்கு பைக்குகளையும் மீட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top