ரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு, இந்த வாரம் வழங்கப்படும்!

ரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு, இந்த வாரம் வழங்கப்படும்!

in News / Local

ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பை வரும் 20 ஆம் தேதி முதல் வினியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

வரும் 20ஆம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு அனைத்து ரேசன் கடைகளிலும் பொதுமக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பே அனைத்து கார்டுகளுக்கும் கொடுத்து முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2 கோடியே 5 லட்சம் அரிசி அட்டை தாரர்களுக்கு, பொங்கல் பரிசாக பச்சரிசி, சர்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, கரும்பு துண்டு மற்றும் ரொக்கம் 1000 ரூபாய் ஆகியவற்றை இந்த ஆண்டு முன்கூட்டியே வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், பொங்கல் பரிசு வழங்க தடையில்லை என மாநில தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top