திங்கள்சந்தை அருகே வில்லுக்குறி சண்முகம் தெருவை சேர்ந்தவர் அருளப்பன் (வயது 65), ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் சம்பவத்தன்று வில்லுக்குறி பாலம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட கார் ஓன்று அவர் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சுங்கான்கடை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அருளப்பன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அருளப்பனின் மகன் பிரவீன் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments