குமரி மாவட்டம் நாகர்கோவிலில் பார்வதிபுரம் முதல் தக்கலை வரை சாலைகள் பழுதடைந்து போக்குவரத்திற்கே தகுதி இன்றி பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு போக்குவரத்து நெரிசலால் சிக்கிதவித்து வந்த நிலையில் தோற்றியோடு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மழையையும் குழிகளில் மழைநீர் தேங்கி இருப்பதையும் பொருட்படுத்தாமல் சாலை போடும் பணி இன்றி சிறப்பாக நடைபெற்றது.
ஆனால் மழைநீரில் சாலை பணிகளை மேற்கொள்ளுவதால் எத்தனை நாட்களுக்கு இந்த சாலை தாக்குபிடிக்கும் என்று வாகன ஓட்டிகள் புலம்பி செல்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை துறை ஆபீசர் இது தான் உங்கள் கடமை உணர்ச்சியா ???
ஒப்பந்ததாரரை இப்படி மழைநீரில் சாலை அமைக்க அனுமதிக்கலாமா ???
ஒரு வேளை கமிஷன் காரணமாக இருக்குமோ ???
மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments