இரணியல் அருகே பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடியின் மகன் கைது

இரணியல் அருகே பணம் கேட்டு மிரட்டிய பிரபல ரவுடியின் மகன் கைது

in News / Local

இரணியல் அருகே குருந்தன்கோடு காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் தங்க ராஜ்(49). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது வில்லுக்குறி திருவிடைக்கோடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடிஜெயகுமாரின் மகன் ஜெயபிரகாஷ் இவரை கத்தியை காட்டி மிரட்டி ருபாய் 200 ஐ பறித்துள்ளார்.

இதுகுறித்து இரணியல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top