சென்னையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநரை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவம் சமீப காலங்களில் மிகவும் அதிகரித்து வருகிறது. அதுவும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தரும் கொடூரச் செயல் இன்னும் அரங்கேறி வருவது பெற்றோர்களுக்கு அச்சத்தை உண்டாக்கி வருகிறது.
இந்த நிலையில், சென்னை ஐசிஎப் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியின் தந்தை, தனது மகளுக்கு பள்ளி வேன் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஓட்டுநர் ராஜாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 Comments