போலி பாஸ்போர்ட்  மூலம் குமரிக்குள் நுழைய முயன்ற 6 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

போலி பாஸ்போர்ட் மூலம் குமரிக்குள் நுழைய முயன்ற 6 பேருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

in News / Local

சென்னையிலிருந்து போலி பாஸ் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பயணிகளை ஏற்றிவந்த சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு காரில் வந்த ஓட்டுனர் உட்பட 6 பேர் மருத்துவக் கல்லூரி யில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது.

அதன் ஓட்டுநர் செங்கல்பட்டை சேர்ந்த விக்னேஷ் போலி பாஸ் மூலம் 5 பயணிகளை ஏற்றிவந்த தெரியவந்தது. இதனையடுத்து காரை பறிமுதல் செய்த போலீசார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதனையடுத்து காரில் வந்த 5 பயணிகள் மற்றும் ஓட்டுனர் உட்பட 6 பேர் நாகர்கோவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரானா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top