கேரளா மாநிலத்திலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள் செல்லக் கூடாது என, பல ஆண்டுகளாகவே கட்டுப்பாடு உள்ளது. இங்கு, எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க, அரசுக்கு ஆட்சேபனை இல்லை என, கேரள மாநில அரசு சமீபத்தில் தெரிவித்தது.
இது தொடர்பான வழக்கில், உயர் நீதி மன்ற நீதிபதிகள் அனைத்து வயது பெண்களை சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் பல நூற்றாண்டுகளாக பெண்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டு வருகின்றனர். பெண்கள் எந்த விதத்திலும் ஆண்களுக்கு குறைந்தவர்கள் அல்ல. பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை உள்ளது. பெண்களை கடவுளாக கௌரவிக்கும் நாட்டில் அவர்களை பலவீனமானவர்களாக கருதக்கூடாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் தான், பெண்கள் காத்திருக்க வேண்டும். மனிதர்களின் பக்தி என்பது, உடலியல் மற்றும் உளவியல் ரீதியாக தீர்மானிக்கக்கூடாது. வழிபாட்டு தளங்களில் பாகுபாடு காட்டக்கூடாது. பாலின அடிப்படையில், பொது இடங்களில் பொது மக்கள் செல்ல தடை விதிப்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது. சபரிமலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்கள். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கணிசமாக கிளம்பியது. கோர்ட் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்பட்டது.
0 Comments