வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில், ஸ்மார்ட் வகுப்பறை தொடக்கவிழா மற்றும் ஆழ்குழாய் கிணறு திறப்புவிழா ஆகிய இருபெரும் விழாக்கள் நடந்தது. நாகர்கோயில் மாவட்ட கல்வி அலுவலர் மோஹனன் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்.பள்ளி முன்னாள் மாணவர் நாகராஜன் முன்னிலை வகித்தார், பள்ளி தலைமை ஆசிரியை ஜெயராமன் பிளவர் குயின் வரவேற்புரை ஆற்றினார்.
நாகர்கோயில் வட்டார கல்வி அலுவலர் ஜெயச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஸ்வாமிநாதன், முன்னாள் கிராம கல்விக்குழு தலைவர் சுப்ரமணியன், தலைமைஆசிரியர் கழக செயலாளர் சுரேஷ் குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்
மாணவ மாணவியருக்கு கல்வி அலுவலர் சீருடைகளை வழங்கினார்,
0 Comments