ஆரல்வாய்மொழி அருகே திருட்டு கார் மோதி ஐடிஐ மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்தவர்கணே சமூர்த்தி (28), சாந்தினி என்பவருக்கு சொந்தமான டிராவல்ஸ் ஏஜென்சியில் சொகுசு கார் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இதேபோல் தூத்துக்குடி கீழ அலங்காரதட்டு பகுதியை சேர்ந்தவர் ஜூலியன். இவர் சாந்தினியின் டிராவல்ஸ் ஏஜென்சியில் இருந்து 2 நாட்களுக்கு சொகுசு காரை வாட கைக்கு எடுத்தார். அந்த காரை கணேசமூர்த்தி ஓட்டினார்.
திரும்பி வந்து பார்த்த போது காரையும் ஜூலியனையும் காணவில்லை. இது குறித்து கணேசமூர்த்தி குற்றாலம் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஆரல்வாய்மொழி சோதனை சாவடிக்கு முன்பாக அந்த பகுதியில் உள்ள ஐடிஐயில் படிக்கும் மாணவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது காவல்கிணற்றில் இருந்து அதிவேகமாக வந்த சொகுசு கார், மாணவன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் மாணவன் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த பொது மக்கள் பைக்கில் காரை துரத்திபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அப்போது டிரைவர் அதிகபோனது என்பதும், காரை ஓட்டி வந்தது ஜூலியன் என்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்ப திவு செய்து அவரை கைது செய்தனர்.
இதற்கிடையே பொது மக்கள் படுகாயமடைந்த மாணவனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து போலீசார் மாணவர் குறித்து விசாரித்தனர். அவர், ஆரல்வாய் மொழி தெற்கு பெருமாள்புரம், புதியகிணறு பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் சூர்யா (17) என்பதும் , வீட்டிற்கு ஒரே பையன் என்பது தெரியவந்தது. ஆரல்வாய்மொழி சோதனை சாவடி அருகே உள்ள ஒரு ஐடிஐயில் படித்து வந்தார். இந்த நிலையில் ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மாணவன்
0 Comments