குமாரபுரத்தை அடுத்த மேக்காமண்டபம் மாடவிளையை சேர்ந்தவர் ஸ்டீபன்(36). டெம்போ டிரைவர். இவருக்கும் செம்பருத்தி விளையை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த இருதினங்களுக்கு முன் செம்பருத்திவிளை குருசடி அருகே ஸ்டீபனும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் ஜாண் கென்னடி, ராபர்ட் கிங்சிலி ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்வின், சிசில்ராஜன், வில்சென்ட் ராஜ், பிரம்மு, சஜின்தாஸ், விமல், ஜெனிபர் ஆகிய 7 பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் ஸ்டீபன் உள்பட 3 பேரையும் கை மற்றும் கம்பால் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது பற்றி ஸ்டீபன் கொடுத்த புகாரின் பேரில் கொற்றக்கோடு போலீசார் செல்வின் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.இது போல் வின்சென்ட் ராஜ்(52) தன்னை தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் ராபர்ட் கிங்சிலி, ஜாண் கென்னடி, ஸ்டீபன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 Comments