தக்கலை அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து சாவு!

தக்கலை அருகே கடன் தொல்லையால் பெண் தீக்குளித்து சாவு!

in News / Local

தக்கலை அருகே உள்ள கீழகல்குறிச்சி, பட்டாணிவிளையை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மனைவி சவுத்தரி (34). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் சந்திரசேகர் கட்டிட வேலை செய்து வந்தார் உடல் நிலை பாதிக்கட் பட்டதால் சந்திரசேகர் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.

வருமானம் எதுவும் இல்லாமல் சில நாட்களில் கடன் தொல்லை ஏற்பட்டது.இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் சவுத்தரி கடந்த 8ம் தேதி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார் இதையடுத்து அவரை மீட்டு தக்கலை பேலஸ் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை சவுத்தரி இறந்தார். இது குறித்த தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top