பூதப்பாண்டியை அடுத்த திட் டுவிளை தெற்கு மார்த்தால் பகுதியை சேர்ந்தவர் விமலா (60). இவரது கணவர் காலமாகி விட்டார். மகளுக்கு திருமணமாகி அருகே வசித்து வருகிறார். இதனால் விமலா வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவர் சம்பவத்தன்று இரவு தூங்கும் போது சிம்னி விளக்கை ஏற்றி வைத்துள்ளார். திடீரென சிம்னி விளக்கில் சேலைப்பட்டு தீப்பிடித்துள்ளது. இதில் விமலா உடல் முழுவதும் தீப்பிடித்து கருகினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இது குறித்து விமலாவின் மகள் மரிய ஜெயந்தி பூதப்பாண்டி போலீசில் புகார்செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments