அரசு ஊழியருக்கு மிரட்டல் : மரக்கடை உரிமையாளர் மனைவியுடன் கைது!

அரசு ஊழியருக்கு மிரட்டல் : மரக்கடை உரிமையாளர் மனைவியுடன் கைது!

in News / Local

பூதப்பாண்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் முதல்நிலை திறன்மிகு உதவியாளராக அருள்ராஜ் (52) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இவரும் இந்த அலுவலகத்தில் பணிபுரியும் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் திட் டு விளையில் மழை நீர் ஓடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள மரக்கடை உரிமையாளர் ரவி மற்றும் அவரது மனைவி ராஜேஷ்வரி ஆகிய இருவரும் அருள்ராஜ் மற்றும் பணியாளர்களை அவதூறாக பேசி அரசு பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக அருள்ராஜ் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் ரவி மற்றும் ராஜேஷ்வரி மீது வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top