சென்னை அனகாபுத்தூரில், தவறான ஊசியால் உயிரிழந்த இளம்பெண் - கிளினிக் மீது புகார்!

சென்னை அனகாபுத்தூரில், தவறான ஊசியால் உயிரிழந்த இளம்பெண் - கிளினிக் மீது புகார்!

in News / Local

இருமல் பிரச்சனைக்காக கிளினிக் சென்ற இளம்பெண், தவறான ஊசியால் அரை மணிநேரத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் நித்யா. இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக இருமல் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவரது பெற்றோர் அவரை அருகில் உள்ள ஜெயம் கிளினிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மருத்துவர் சுஜாதா கருணாகரன் அவரை பரிசோதித்துவிட்டு அவரது கையில் ஒரு ஊசி போட்டுள்ளார். ஊசி போட்ட சில நிமிடங்களில் நித்யாவிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ந்து போன நித்யாவின் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அங்கு சிகிச்சையளிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு நித்யாவை பரிசோதித்த மருத்துவர் அவர், அரைமணி நேரத்திற்கு முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு கதறி அழுத பெற்றோர், பின்பு தவறான ஊசியால் தன் மகள் இறந்துவிட்டதாக சங்கர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments

Leave a Reply

Your email address will not be published.

*

Go to Top