தென்தாமரைகுளம் அருகே உள்ள காட்டுவிளையை சேர்ந்தவர் அருள்சேகர் (வயது 52). இவருக்கு ஒரு மகளும், சுபின் (21) என்ற மகனும் இருந்தனர். சுபின் பாலிடெக்னிக் படித்து விட்டு வேலைக்கு முயற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சுபினின் சகோதரிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணவிழாவுக்கு சுபினின் நண்பர்கள் பலர் வந்திருந்தனர். அவர்கள் கபினிதான் மது விருந்து கேட்டதாகவும், அதற்கு சுபின் ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இது அருள்சேகருக்கு தெரிய வந்ததும், அவர் மது விருந்து கொடுத்ததற்காக சுபினை கண்டித்ததாக தெரிகிறது. அப்போது அங்கு சுபின் நண்பர்கள் இருந்துள்ளனர் இதனால் மனவேதனை அடைந்த சுபின், வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றி அருள்சேகர் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 Comments