இரணியல் அருகே கண்டன்விளை மடவிளாகம் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் (55). அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் காமராஜன் (25).டிப்ளமோ படித்துள்ளார். சரியான வேலை கிடைக்காமல் இருந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட காமராஜன் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வேலப்பன் இரணியல் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Comments