சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

வெளியிடப்பட்ட நாள் இல் சமூகம் / சமூகநல செய்திகள் மூலம் CafeKK Team

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சுற்றிலும் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கிறார்கள்.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

பாலமோர் சாலையில் பயணிப்போரிடம் கேட்டால் மோசமான சாலைகளின் தரம், போக்குவரத்து நெரிசல் என்று ஏராளமான அவதிகளை முன்வைக்கிறார்கள். நாகர்கோவிலிலிருந்து புத்தேரி , இறச்சகுளம் வழியாக செல்லும் பேருந்துகள் வடசேரி கிராம அலுவலகம் வழியாகச் சென்று கிருஷ்ணன்கோவில் வந்து எஸ்.எம்.ஆர்.வி பள்ளியின் முன்பு சென்று பாலமோர் சாலையில் சேர்கின்றன. ஆரல்வாய்மொழியிலிருந்து செண்பகராமன்புதூர் , ஆண்டித்தோப்பு வழியாக வரும் வாகனங்கள் புத்தேரி வழியாக வந்து எஸ்.எம்.ஆர்.வி பள்ளி முன்பாக நேரே பயணித்து வடசேரி வருகின்றன. இந்த இரண்டு மார்க்கத்திலுமே பயணிக்கும் வாகனங்கள் சந்திக்கும் எஸ்.எம்.ஆர்.வி பள்ளி சந்திப்புதான் காலைநேரத்து இடியாப்பச் சிக்கலில் சிக்கியிருக்கின்றது.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

கிருஷ்ணன் கோவிலில் இருந்து எஸ்.எம்.ஆர்.வி பள்ளி சந்திப்பில் பேருந்துகள் திரும்பும் போது பேருந்தின் நீளத்திற்கு திரும்பும் புள்ளி இல்லாத அளவிலான குறுகலான பகுதி அது. ஆகையால் பேருந்து ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்துக்காளாகின்றனர். இதிலும் கொடுமை என்னவென்றால் சிலவாகன ஓட்டிகள் வேண்டுமென்றே வடசேரியிலிருந்து கீழே இறங்கி எஸ்.எம்.ஆர்.வி பள்ளியை நோக்கி வரும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட முடியாமல் தடுத்து மேலும் போக்குவரத்து சிக்கலை உருவாக்குகின்றனர்.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

எஸ்.எம்.ஆர்.வி பள்ளி சந்திப்பு மிகவும் குறுகலான ஒன்று. மேலும் இந்தப் பகுதியில் நான்கு பள்ளிகள் இருக்கின்றன. இரண்டு மருத்துவமனைகள் இருக்கின்றன. ஏராளமான கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி வாகனங்களில் ஏறுவதற்கான முக்கிய நிறுத்தங்களும் இங்கு இருக்கின்றன.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

மேற்கூறிய நான்கு பள்ளிகளுக்கும் செல்லும் மாணவர்கள் இந்த நான்கு சாலை சந்திப்பில் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.

சிக்கலுக்கு உள்ளாகும் போக்குவரத்து சிக்னல்கள்

மேலும் படிக்க

ஓகி நிவாரணம் வழங்க கோரி போராட்டம்!

வெளியிடப்பட்ட நாள் இல் செய்திகள் / உள்ளூர் செய்திகள்

'நாம் குமரி மக்கள் என்ற சமூக இயக்கம் ஒக்கி புயல் சிதைத்த குமரி மக்களுக்கு நிவாரணத் திட்டங்கள் கேட்டு இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தியது. முகப்புரை நிகழ்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்த 'நாம் குமரி மக்கள்' அமைப்பின் நிறுவனர் அருட்திரு. ஜெகத் கஸ்பார், "கல்வி, உடல்நலம், பொருளாதாரத் தன்னிறைவு என அனைத்து மனித வளர்ச்சிக் குறியீடுகளிலும் நாட்டுக்கே முன்மாதிரியாக வளர்ந்துவந்த நம் மாவட்டத்தை இடைமறித்துள்ளது. 50 லட்சம் வாழைகள் இழப்பு 80 சதம் சிறு-குறு விவசாயத் தொழில் முனைவோரை அன்றாடக் கூலிகளாக்கி வீழ்த்தியிருக்கிறது; இருபது லட்சத்துக்கும் மேலான ரப்பர் மரங்கள் இழப்பு பல்லாயிரம் குடும்பங்களது வாழ்வாதாரங்களையும் தற்சார்பு பொருளாதார அடிப்படைகளையும் தகர்த்துள்ளது. படகுகள் இழந்த மீனவர்களின் வாழ்க்கை நடைபிணங்கள் போல் நிற்கிறது. 45 லட்சம் தென்னை, பல்லாயிரம் ஹெக்டேர் நெல், மரவள்ளி, வாசனைப்பயிர்கள், மற்றும் பூந்தோட்டங்கள்,பல லட்சம் பழமரங்கள் என விவசாய .

மேலும் படிக்க

வெளியிடப்பட்ட நாள் இல் /

.

மேலும் படிக்க

வெளியிடப்பட்ட நாள் இல் /

மேலும் படிக்க

×
செய்திமடல்
Find the best Events, Food Joints, Fashion Outlets, Neighbors & the Nagercoil Neighborhood everyday!
மேலே செல்ல